Saturday, January 19, 2008

மழை

தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கலாமோ
தாகமே இல்லையென தவறுதலாய் நினைத்துவிட்டாள்
தாகம் தீர்க்க வேண்டுமென்று தவமாய் தவித்திருந்தால்
தாவியே தான் வருவாள் தரணியெங்கும் பெய்வாள்
மோகமும் நீக்கிடுவாள் முகமும் சுழிக்கமாட்டாள்
தாகத்தோடு தேடுவோர்க்கு தமிழ்வழியே பொழிவாள்
தாகம் தீர்ந்த பேர்க்கு தவசியென்ற பெயரிடுவாள்
ஆனந்தவர்ஷிணி அமிர்தம் பொழியும் அம்மணி
அவள் கருணையென்னும் மழையால் காலமெல்லாம் காப்பாள்

No comments: