Saturday, April 12, 2008

எண்ணங்களும் மின்சாரமும்

இந்த நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பான மின்சாரம் நாகரீக வளர்ச்சியில் முக்கிய இடம் பெற்றுள்ளது. இந்த மின்சக்திக்கும் இணையானது நமது எண்ண அலைகள் என்பதை தற்போதைய விஞ்ஞர்ன ஆராயச்சி பெரும் ஆய்வுகள் மூலம் கண்டுள்ளது.

ஆனால் விஞ்ஞானம் இன்று சொல்லும் செய்தியை மெய்ஞானம் என்றோ சொல்லியிருக்கிறது. எண்ணங்களின் வலிமை ஒரு அணுவின் ஆற்றலையும் விஞ்ஞக்கூடியது. இது தொடர்பான ஒரு பழந்தமிழ்ப் பாடலைப் பாருங்கள். இது எம்பெருமான் பிரம்மப் பிரகாச பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் பேரிரக்கப் பிரவாகங்களில் ஒரு துளி.


எண்ணம் பல கோடியதாய் விரிந்தே
மன்னும் பல உயிர்களெலாம் நமவாய்
வின்னம் பல கோடி துயரறுநாள்
பொன்னம்பல மிங்கெணதிர்த்ததுவே

பரவிப் பிரியும் எண்ணங்கள் விரிந்து படுமானால் அதன் அடர் சக்தி குறைந்து உயிர்களை எமனுக்கு இரையாக்கும், அதே எண்ணங்களின் வலிமையை குவித்துப் பெருக்குவோமானால் வின்னங்களாகிய துன்பங்கள் விலகி விலை மதிக்கமுடியாத பொன்னம்பல உயிர் வெளிச்சத்தை எதிர்ப்படக் காணலாம்.

மின்சாரப் பண்பின் பல பயன்பாடுகளில் ஒன்றான பல்புகளின் மூலம் இருள் நீக்கும் வெளிச்சம் பெறப்பயன்படுவது ஒரு சிறு முயற்சிதான். ஆனால் மின்சாரத்தின் அதி முக்கியப் பண்பு அதன் அடர்நிலை வெப்பம்தான். இந்த வெப்பம் நமது உடலிலும் ரஷிக்கும் அக்னி மற்றும் பட்சிக்கும் அதாவது அழிக்கும் அக்னி மயமாக உள்ளது. இது எண்ண அலைகளால் வெளிச்சமடைவதற்கும் அல்லது உடலையே எரித்துவிடும் உயர் வெப்பநிலைக்கும் இட்டுச் செல்லும் முக்கிய காரணியும் ஆகும். எண்ணமும் சுவாசமும் ஒன்றுக்கொன்று பெரும்பங்கு வகித்து எண்ண அலைகளால் சுவாசம் வசமாகும் வாசி யோகத்தின் பெருமையால் உடலை உன்னதமாக்கிக் கொள்ளலாம்.

இதில் மரணத்தை வெல்லும் உபாயமும் சித்தர்கள் தந்திருக்கிறார்கள்.


இங்கு மனித உயிர் ஆற்றலானது மின்சக்திக்கு ஒப்பான கண்ணிற்குப் புலப்படாத ஒரு உயர்சக்தியாகும் இதைத்தான் வள்ளுவம் உறங்குவதுபோல் சாக்காடு என்று கூறுகிறார். எண்ணங்கள் ஒடுங்கும்போது சுவாசம் ஒடுங்குகிறது. எட்டு அங்குல சுவாசத்தை 6 அங்குலமாக வெளிவிட்டு பின் 4 ஆக மாற்றி இன்னும் உயர்நிலை யோகத்தில் மூக்கிற்குள்ளேயே சுவாசித்து வாழ்வாங்கு வாழவ்துவே மரணமிலாப் பெருவாழ்வு. மரணத்தை நம் கைவசப்படுத்தும் அறிவு மனிதனுக்கு மட்டும்தான் தரப்பட்டிருக்கிறது.

நம் மொழி மூச்சுடன் இணைக்கப்பட்ட ஒரு தெய்வீக்த்தன்மை வாய்ந்தது என்பது அனுபவித்தால் தெரியும்.வல்லின மெல்லின அமைப்பே நமது மொழிக்கு ஒரு தெய்வீகத்தை ஊட்டியிருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக எந்த மொழியாளரும் தனது தாய்மொழி தவிர்த்து வேறு பாஷையை அதன் அடிப்படைத் தன்மையிலேயே சுலபமாகப் பேசிவிடுவர். ஆனால் தமிழ்மொழியை மட்டும் அவ்வாறு இலகுவாகக் கைக் கொள்ள முடியாது. தமிழைத் தாய்மொழியாக அறிந்து கொண்டவர்களுக்குத்தான் இயல்பான முறையில் அதன் அழகை அனுபவித்து உணர்ந்து பேச முடியும், ஆனால் தமிழறிந்த ஒருவரால் எந்த ஒரு பாஷையையும் அந்த தேசத்து தாய்மொழி உணர்வோடு உச்சரிப்பதை இலகுவாக கைக்கொள்ளமுடியும்.

எடுத்துக் காட்டாக "சந்தம்" என்பதை நாம் சரியான முறையில் உச்சரிப்போம். இதையே தமிழ் கற்றுக் கொண்ட வேற்று மொழிக்காரர்கள் உபயோகித்தால் சந்+தம் தம் என்பதை கொஞ்சம் நன்கு பரிச்சியமாகும்வரை அழுத்தம் கொடுத்துதான் சொல்லமுடியும். இதையே சுவாசத்துடன் இணைத்து சந்நம் என்று பிரயோகித்தமானால் யாவரும் ஒலியின் நயத்தைக் குறைக்காமல் சொல்லமுடியும். இதேபோல் பங்கம் என்பதை பங்ஙம் என்று எழுதிவைத்துக் கொண்டால்தான் சரியாகச் சொல்லமுடியும். தங்கம் என்பது தங்ஙம் எனவும் பந்தம் என்பது பந்நம் எனவும் இதுபோல் 24 அட்சரங்கள் தமிழில் இன்னும் கையாளப்படாமல் மறைபொருளாகவே இருக்கிறது. வழக்குத் தமிழில் இது மறைக்கப்பட்டாலும் நாம் இன்னும் நம்மொழியை சிதைக்காமலே கையாண்டு வருகிறோம். இது அதிசயம்தானே.அகர. உகர, சிகர அமைப்புக்கள் அனைத்தும் மெய்யோடு உயிரையும், உயிரோடு மெய்யையும் இணைத்தே நம் மொழி கையாளப்பட்டு வந்திருக்கிறது. பொய்யான இவ்வுடலை மெய்யென்று சொன்னது இதைவைத்துத்தான்.

எண்ணத்தை வசப்படுத்தும் வாழ்வியலை நமக்குத் தந்ததுதான் நம் மொழியின் சிறப்பு. உகார எழுத்துவடிவம் பிள்ளையார் சுழியாகவும், ஓங்காரப் பொருள் மற்றும் எழுவகை சப்த ஸ்வரங்கள் ஆக அனைத்துமே அட்சரத்தில் மறைந்து இருக்கிறது, எண்ணத்தை ஒடுக்கும் உயர்வரிசைப் பரிபாஷைச் சொற்களைக் கொண்ட நம்மொழியில் விஞ்ஞானப் பார்வையில் ஒப்புவமை ஆய்வுக்கு கொண்ட மின்சாரம் என்பதை நமது பெரியோர்கள் உயிர் ஆற்றலாக கொண்டுள்ளார்கள், அதாவது உயிரும் மெய்யும் மொழியில் உள்ளது. அகத்துள் தேடினால் இன்னும் அதிகம் பெறலாம்,

அன்னைத் தமிழ்

மறைபொருளாய் நின்ற
மாதவத்து மாதரசி
தன்மனமொப்ப நிற்பவர்க்கு
முழுயவனம் காட்டுவாள்
தாழ்மையோடு அவள் முகத்தைக்
காட்டுமாறு கேட்டுனின்றால்
அங்கத்தின் ஒரு பகுதி
அவர்தம் தரம் அறிந்து
அன்னையவள் தன்னழகை
அளவோடு வெளியிடுவாள்
ஒருவர்க்கு திருப்பாதமும்
உரத்து அழுவோர்க்கு
உதவிடும் திருக்கரமும்
முப்பாலாம் தமிழ்ப்பால் வேண்டி
தாகத்தோடு இருப்போர்க்கு
தன் அங்கம் முழுவதும்
அன்புடனே அன்னைஅவள்
அமுதசுரபியாய் அள்ளி வழங்குவாள்

Monday, April 7, 2008

இயேசு மீண்டும் வருவார்

ஒப்பற்ற உலக மகாத்மாக்கள் உலா வரும்போது உதாசீனம்தான் அவர்கள் கண்டது. ஏனெனில் மனத்தின் மாசுகளால் நாம் எதிர்பார்க்கும், கற்பனை செய்து வைத்திருக்கும் கதாபாத்திரத் தோற்றத்தில் மகான்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. நம் எண்ணத்தில் வடித்து வைத்த கற்பனையான உருவங்களைக் கண்டாலும் நாம் அவர்களை ஏற்கப் போவதில்லை. அறிவின் முழு முயற்சியே நம்மைச் சுற்றியுள்ள நன்மையை அறிந்து கொள்வதுதானே. நம்மிடமே உலாவி இருக்கும் பெரியோர்களை நாம் எப்போதும் அறிந்து கொள்வதில்லை. அவர்கள் மறைவுக்குப் பின்தான் போற்றிப் புகழுகிறோம். இதுவும் ஒரு அறியாமையே,உதாரணமாக ஒரு குளத்தில் உள்ள தாமரைக்கு அதிகச் சொந்தம் அதில் அதனோடு வாழும் மீன்களும் தவளைகளுமே. ஓடி விளையாடி தாமரை பூத்ததிலிருந்து அதிக நெருக்கத்துடன் உள்ள இந்த ஜீவன்களுக்கு தாமரையின் உள்ளே இருக்கும் தேனின் சுவை தெரியாது. காலமெல்லாம் அதனோடு புரண்டு புழங்கி இருந்தாலும் அறிந்து கொள்ளாத அந்த ஜீவனக்ள் அறியாமையின் அடையாளங்கள். ஆனால் தாமரை முதிர்ந்து பூத்துக் குலுங்கி Divine Nector ஆகிய தேனை சூலில் சுமந்து இருக்கும் குணம் கண்டு எங்கோ பிறந்து வளர்ந்த தேனிக்கள் தான் அதைப் பெறுவதற்கு தகுதியாகிறது. என்னதான் தவளையும், மீனும் தாமரைக்கு சொந்தம் கொண்டாடினாலும் முடிவு பலனான தேன் என்னவோ அறிவுடைய தேனீக்களுக்குத்தான்.நுண்ணிய நுண்ணறிவு கொண்டு நோக்கும்கால் நம்மிடையே புழக்கத்திலிருக்கும் பெரியோர்களை அவர்கள் சுமந்து கொண்டிருக்கும் தேனின் சுவையை பெறத் தகுதியுடையோர்கள்தான் உண்மையான அறிவாளிகள். மற்ற உலகப் படிப்பாலும், பொருளாதாய வெற்றியாலும் அறிஞர்களை உதாசீனப்படுத்துபவர்கள் தவளைக்கும் மீனுக்கும் ஒப்பானவர்களே. உதாரணமாக கிருஷ்ண பரமாத்மாவே நேரில் குண்டத்தோடும் மயில் இறகு வைத்த கிரீடத்தோடும், கையில் குழலோடும் இன்று நேரில் வந்தால் நிச்சயம் நகைப்புக்கும் கேலிக்கும் ஆளாகி வெருண்டு அவரை அதிகமாக கோவில்களில் தேடும் ஹிந்துப் பெருமக்களால் ஓடவைக்கப்படுவார். இயேசுநாதர் இன்று வந்தால் அவரிடம் அற்புதங்களை எதிர் பார்த்து சொந்தம் கொண்டாடும் அனைத்து மக்களாலும் சாத்தியமே அற்ற செயல் படுத்தமுடியாத அதிசயங்களை எதிர்பார்த்து அவரைப் புறக்கணிப்பார்கள். ஆனால் இயேசு பிரான் தனது இரண்டாம் வருகையை உலகத்திற்கு அறிவித்து இருக்கிறார். தேடுங்கள் கண்டடைவீர்கள் என்ற வேத வசனம் நிறைவேற வேண்டுமானால், அவரிடம் அதிசயங்களை எதிர்பார்ப்பதை விட்டு அன்று காட்டிய அந்த மனித நேயமும் அன்பையும் நம்மிடையே தேடினால் அவர் நிச்சியம் கண்ணில் படுவார். ஏனெனில் அவர் மரணிப்பதுமில்லை மறைவதும் இல்லை. நித்திய ஜீவனான அறிவாகரப் புதையலிலே அவர் என்றும் மறைந்து வாழ்வளித்துக் கொண்டிருக்கிறார்.கிருஷ்ணன் என்பதும் கிருஸ்து என்பதும் ஒரு ஒப்பற்ற உயிர் ஆற்றல்.மனத்துக்கண் மாசற்ற ஒரு நிலையை உருவகமாக்கப் பெற்ற ஒரு குணத்தின் பிரதிபலிப்பு. அக் குணங்கள் வாய்க்கப் பெற்றால் நாமே ஒரு கிருஷ்ணன்தானே, கிறிஸ்துதானே. கிருஷ்ணனாக அரிதாரம் மட்டும் பூசாமல் அவர்களுடைய ஒப்பற்ற குணங்களைக் கைக் கொள்ளும்போது மனிதனே இறைவனாகிறான்.அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்நாம் பிறந்தபோது குற்றம் குறையற்ற இறைநிலையுடன் கூடிய அறமாகத்தானே பிறந்தோம். அறம் என்ற பொருளோடு பிறந்த நாம் வயது ஏற ஏற மறச் செயல்களால் அறம் மறைய குணம் கெட்ட குடிமக்களானோம். அறம் என்ற போர்வையில் எந்த தான தர்மங்களும் தேவையில்லை. நம்மிடம் உள்ள மறம் என்ற தீமைகளை என்னஎன்ன என்று அறிந்து அதை நீக்கிக் கொண்டாலே பிறந்த போது இருந்த அறமாகவே மரிக்கும்போதும் இருப்போம். அவ்வாறு குற்றங்களை நீக்கிக் கொண்டவர்களே கிருஷ்ணனும், கிருஸ்துவும் மற்றும் எண்ணற்ற உலகில் தோன்றிய உத்தம உருவங்கள்.மறத்தை அறிந்து நீக்கிக் கொள்ளும் உபாயமே அறம் எனப்படுவது. அதற்கு முதலில் மனத்துக் கண் மாசிலன் ஆதல் என்ற நிலையை அடைதலே அனைத்து அறனுமாகும்.அப்படிப்பட்ட அவதார புருஷர்கள் நிச்சயம் நாம் கற்பனையாகப் பார்க்கும் உருவத்தில் உலா வரமாட்டார்கள்.புனிதர் இயேசுவை நம்மிடையே தேடுவோம்,