Saturday, April 12, 2008

அன்னைத் தமிழ்

மறைபொருளாய் நின்ற
மாதவத்து மாதரசி
தன்மனமொப்ப நிற்பவர்க்கு
முழுயவனம் காட்டுவாள்
தாழ்மையோடு அவள் முகத்தைக்
காட்டுமாறு கேட்டுனின்றால்
அங்கத்தின் ஒரு பகுதி
அவர்தம் தரம் அறிந்து
அன்னையவள் தன்னழகை
அளவோடு வெளியிடுவாள்
ஒருவர்க்கு திருப்பாதமும்
உரத்து அழுவோர்க்கு
உதவிடும் திருக்கரமும்
முப்பாலாம் தமிழ்ப்பால் வேண்டி
தாகத்தோடு இருப்போர்க்கு
தன் அங்கம் முழுவதும்
அன்புடனே அன்னைஅவள்
அமுதசுரபியாய் அள்ளி வழங்குவாள்

No comments: