Saturday, April 12, 2008

எண்ணங்களும் மின்சாரமும்

இந்த நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பான மின்சாரம் நாகரீக வளர்ச்சியில் முக்கிய இடம் பெற்றுள்ளது. இந்த மின்சக்திக்கும் இணையானது நமது எண்ண அலைகள் என்பதை தற்போதைய விஞ்ஞர்ன ஆராயச்சி பெரும் ஆய்வுகள் மூலம் கண்டுள்ளது.

ஆனால் விஞ்ஞானம் இன்று சொல்லும் செய்தியை மெய்ஞானம் என்றோ சொல்லியிருக்கிறது. எண்ணங்களின் வலிமை ஒரு அணுவின் ஆற்றலையும் விஞ்ஞக்கூடியது. இது தொடர்பான ஒரு பழந்தமிழ்ப் பாடலைப் பாருங்கள். இது எம்பெருமான் பிரம்மப் பிரகாச பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் பேரிரக்கப் பிரவாகங்களில் ஒரு துளி.


எண்ணம் பல கோடியதாய் விரிந்தே
மன்னும் பல உயிர்களெலாம் நமவாய்
வின்னம் பல கோடி துயரறுநாள்
பொன்னம்பல மிங்கெணதிர்த்ததுவே

பரவிப் பிரியும் எண்ணங்கள் விரிந்து படுமானால் அதன் அடர் சக்தி குறைந்து உயிர்களை எமனுக்கு இரையாக்கும், அதே எண்ணங்களின் வலிமையை குவித்துப் பெருக்குவோமானால் வின்னங்களாகிய துன்பங்கள் விலகி விலை மதிக்கமுடியாத பொன்னம்பல உயிர் வெளிச்சத்தை எதிர்ப்படக் காணலாம்.

மின்சாரப் பண்பின் பல பயன்பாடுகளில் ஒன்றான பல்புகளின் மூலம் இருள் நீக்கும் வெளிச்சம் பெறப்பயன்படுவது ஒரு சிறு முயற்சிதான். ஆனால் மின்சாரத்தின் அதி முக்கியப் பண்பு அதன் அடர்நிலை வெப்பம்தான். இந்த வெப்பம் நமது உடலிலும் ரஷிக்கும் அக்னி மற்றும் பட்சிக்கும் அதாவது அழிக்கும் அக்னி மயமாக உள்ளது. இது எண்ண அலைகளால் வெளிச்சமடைவதற்கும் அல்லது உடலையே எரித்துவிடும் உயர் வெப்பநிலைக்கும் இட்டுச் செல்லும் முக்கிய காரணியும் ஆகும். எண்ணமும் சுவாசமும் ஒன்றுக்கொன்று பெரும்பங்கு வகித்து எண்ண அலைகளால் சுவாசம் வசமாகும் வாசி யோகத்தின் பெருமையால் உடலை உன்னதமாக்கிக் கொள்ளலாம்.

இதில் மரணத்தை வெல்லும் உபாயமும் சித்தர்கள் தந்திருக்கிறார்கள்.


இங்கு மனித உயிர் ஆற்றலானது மின்சக்திக்கு ஒப்பான கண்ணிற்குப் புலப்படாத ஒரு உயர்சக்தியாகும் இதைத்தான் வள்ளுவம் உறங்குவதுபோல் சாக்காடு என்று கூறுகிறார். எண்ணங்கள் ஒடுங்கும்போது சுவாசம் ஒடுங்குகிறது. எட்டு அங்குல சுவாசத்தை 6 அங்குலமாக வெளிவிட்டு பின் 4 ஆக மாற்றி இன்னும் உயர்நிலை யோகத்தில் மூக்கிற்குள்ளேயே சுவாசித்து வாழ்வாங்கு வாழவ்துவே மரணமிலாப் பெருவாழ்வு. மரணத்தை நம் கைவசப்படுத்தும் அறிவு மனிதனுக்கு மட்டும்தான் தரப்பட்டிருக்கிறது.

நம் மொழி மூச்சுடன் இணைக்கப்பட்ட ஒரு தெய்வீக்த்தன்மை வாய்ந்தது என்பது அனுபவித்தால் தெரியும்.வல்லின மெல்லின அமைப்பே நமது மொழிக்கு ஒரு தெய்வீகத்தை ஊட்டியிருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக எந்த மொழியாளரும் தனது தாய்மொழி தவிர்த்து வேறு பாஷையை அதன் அடிப்படைத் தன்மையிலேயே சுலபமாகப் பேசிவிடுவர். ஆனால் தமிழ்மொழியை மட்டும் அவ்வாறு இலகுவாகக் கைக் கொள்ள முடியாது. தமிழைத் தாய்மொழியாக அறிந்து கொண்டவர்களுக்குத்தான் இயல்பான முறையில் அதன் அழகை அனுபவித்து உணர்ந்து பேச முடியும், ஆனால் தமிழறிந்த ஒருவரால் எந்த ஒரு பாஷையையும் அந்த தேசத்து தாய்மொழி உணர்வோடு உச்சரிப்பதை இலகுவாக கைக்கொள்ளமுடியும்.

எடுத்துக் காட்டாக "சந்தம்" என்பதை நாம் சரியான முறையில் உச்சரிப்போம். இதையே தமிழ் கற்றுக் கொண்ட வேற்று மொழிக்காரர்கள் உபயோகித்தால் சந்+தம் தம் என்பதை கொஞ்சம் நன்கு பரிச்சியமாகும்வரை அழுத்தம் கொடுத்துதான் சொல்லமுடியும். இதையே சுவாசத்துடன் இணைத்து சந்நம் என்று பிரயோகித்தமானால் யாவரும் ஒலியின் நயத்தைக் குறைக்காமல் சொல்லமுடியும். இதேபோல் பங்கம் என்பதை பங்ஙம் என்று எழுதிவைத்துக் கொண்டால்தான் சரியாகச் சொல்லமுடியும். தங்கம் என்பது தங்ஙம் எனவும் பந்தம் என்பது பந்நம் எனவும் இதுபோல் 24 அட்சரங்கள் தமிழில் இன்னும் கையாளப்படாமல் மறைபொருளாகவே இருக்கிறது. வழக்குத் தமிழில் இது மறைக்கப்பட்டாலும் நாம் இன்னும் நம்மொழியை சிதைக்காமலே கையாண்டு வருகிறோம். இது அதிசயம்தானே.அகர. உகர, சிகர அமைப்புக்கள் அனைத்தும் மெய்யோடு உயிரையும், உயிரோடு மெய்யையும் இணைத்தே நம் மொழி கையாளப்பட்டு வந்திருக்கிறது. பொய்யான இவ்வுடலை மெய்யென்று சொன்னது இதைவைத்துத்தான்.

எண்ணத்தை வசப்படுத்தும் வாழ்வியலை நமக்குத் தந்ததுதான் நம் மொழியின் சிறப்பு. உகார எழுத்துவடிவம் பிள்ளையார் சுழியாகவும், ஓங்காரப் பொருள் மற்றும் எழுவகை சப்த ஸ்வரங்கள் ஆக அனைத்துமே அட்சரத்தில் மறைந்து இருக்கிறது, எண்ணத்தை ஒடுக்கும் உயர்வரிசைப் பரிபாஷைச் சொற்களைக் கொண்ட நம்மொழியில் விஞ்ஞானப் பார்வையில் ஒப்புவமை ஆய்வுக்கு கொண்ட மின்சாரம் என்பதை நமது பெரியோர்கள் உயிர் ஆற்றலாக கொண்டுள்ளார்கள், அதாவது உயிரும் மெய்யும் மொழியில் உள்ளது. அகத்துள் தேடினால் இன்னும் அதிகம் பெறலாம்,

No comments: