Sunday, January 20, 2008

பூமித்தாய்

மானம் கெட்ட மடந்தை அவள்
பொறுமைக்குச் சொந்தக்காரி
வாழ்வளிக்க வந்த அவள்
வானம் பார்த்து நிற்கிறாள்
ஈனம் நிறை இன்னல்களால்
இயன்றவரை இடும்பளிக்கும்
இச்சகத்து மாந்தர் தம்மை
இரும்புக் கரம் கொண்டு
இதுவரைஇன்னல் இழைக்க நினைக்காதேன்
மானம் கெட்ட மடந்தை அவள்
மங்கை நல்லாள் பூமித்தாய்

No comments: