Saturday, January 19, 2008

பரமபதம்

செய்ய பல செய்திகள் உண்டு
செம்மையாய் செய்யும் திறம் கொணடால்
செய்திகள் சேவையாகும்
சேவையின் பலன் சோகத்தை அசோகமாக்கும்
சோகநிலை மாற்றி யோக நிலை கூட்டும்
கூடும் குறிப்பறிய கொள்கை பல உண்டு
உண்டு கொழுக்கும் உணர்வை
உதைத்துத் தள்ளி தனிமையின்
தாக்கத்தை தவமாக்கி
சேவை செய்திடலாம் சேவடி பற்றி
பற்றியது யாவும் பழிக்கும் பற்றாம்
பற்றற்றான் பற்றினை
பற்றுவதுவே பரமபத சேவையாம்

1 comment:

I AM naagaraa said...

பரமபதம் அருமை ஐயா

பற்றிய பற்றுகள்
பற்றற விடவே
பற்றும் பற்றாம்
சற்குரு சரணம்

பற்றப் பற்றப்
பற்றும் மெய்க்கனல்
பற்றும் மெய்வழி
சற்குரு சரணம்

பரம பதத்தைச்
சிரமேற் பதித்து
நெஞ்சகம் திறந்த
சற்குரு சரணம்

அன்புடன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
நான் வழங்கும் மகாயோகம்
என் கவிதைகள்