Sunday, January 20, 2008

அங்கயற்கண்ணி பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள்


சைவக் குரவர்கள் வரிசையில் கடைக் கலியில் மக்களின் வெங்கலித் துயர் துடைப்பதற்காக அவதார மகிமை பெற்று பூர்வாசிரமத்தில் காதிர்பாட்சா என்ற திருநாமத்தோடு அவதரித்த கர்த்தாதி கர்த்தர், மகதி கல்கி என்னும் சாலை ஆண்டவர்கள் அறைந்து வைத்த சைவத் திருமந்திரமாம் "மறலி கைதீண்டா சாலை ஆண்டவர்கள் மெய்மத" உற்பவ உற்பன்னர், மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்வளித்த எம்மான் சாலை ஆண்டவர்களின் மஹாப் மந்திரப் பிரேரணையில் சிவனிலை பற்றிய தகவல்.
அங்கமே அனைத்துமாம்
அயனே சிவமாம்
கண்ணியே அன்னையாம்
அங்கத்தில் அயர்ந்த அயனை
அடைந்த கண்ணியே அங்கயற்கண்ணி
அவள் அடைந்த சிவம்
வெளியானால் சிவம் போன
அங்கம் சவமாகும்
சைவ சித்தாந்தங்கள் ஜீவனை சிவமென்கிறன. அங்கத்தில் சிவனிலையின் இருப்பே சக்தியின் ரூபத்தில் வெளிப்படுகிறது. அச் ஜீவன் விலகினால் சக்திக்கு வேலையில்லை. சவம் என்ற பெயரெடுத்து அவவுடலைத் தாங்கி அழிந்து படுகிறது. அழியாநிலையைப் போதிப்பதுவே சைவம்.
சைவத்திருமேனி தாங்கி வரும் குருகொண்டல்களின் வாய்மை எனும் அமிர்த வர்ஷிப்பினால் அங்கத்தில் அயர்ந்திருக்கும் சிவனிலையை அறிந்து கொண்டு அழியா நித்திய உடலை ஜீவன் பெருவதுவே முக்தி நிலை என்பதுவே அண்ணல் அவர்கள் எங்களுக்கு காட்டிய அரு நெறி. அது சிவ நெறி.

No comments: