Thursday, January 24, 2008

பாரத மண்ணின் பெருமைமிகு மைந்தன்



சேற்றைக் கூட தின்னும் நாளும் சீக்கிரமே வந்திடுமோ
வாடி நின்ற என் வயி்ற்றின் வாட்டம் போக்க முடியலியே
சூதும் என்றும் வாதும் என்றும் ஏதேதோ சொல்லுவார்கள்
சொந்தம் யாரும் இல்லாததால் சொல்லின் அர்த்தம் புரியலே

சோறு எனக்குக் கிடைச்சாத்தான் வேறு பாஷை புரியுமே
சோறு என்ற ஒன்றுதான் சொர்க்கமாகும் இப்போது
தாயிருந்தால் அவளும் தவிக்கவிட மாட்டாளே
தாயைத் தேடி அலுத்துவிட்டு தவித்து வரும் நாளையில்

தாகம் தீர்க்கும் யாருமே தாயாய் எனக்கு ஆவாளே
என்னைப் போல எத்தனையோ ஏழைக் கூட்டம் வாடுது
எனக்கு இது புதுசுதான் இன்னும் கொஞ்சம் பழகணும்
பாதி உடம்பு பசியிலே பங்கப்பட்டு போனது

பெருமைமிகு பாரதத்தின் பாரம்பரியப் பெருமையில்
என்போல பால பரதேசிகளுக்கும் பலமான பங்கிருக்கு
பழம் பெருமை பேசுவதால் பலனொன்றும் இல்லையே
பக்குவமாய் எங்களுக்கும் பாதை ஒன்று காட்டுங்களேன்

No comments: