குறைந்துவிடும் அனைத்தும் குவலயத்தில்
குன்றாத ஒன்று குறையில்லாமல் வேண்டும்
காதலாலும் காமத்தாலும் கவிந்து நிற்கும் கடமும்
கடைசியில் ஒருநாள் காலனுக்கு உணவாகும்
காலத்தே பயிர் செய்யும் கருத்தினை அறிந்தால்
குறையையும் நிறைவாய் கொள்ளலாமே.
Thursday, January 24, 2008
நிறை குணம்
Posted by
SALAI JAYARAMAN
at
10:38 AM
Sunday, January 20, 2008
அங்கயற்கண்ணி பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள்
Posted by
SALAI JAYARAMAN
at
2:18 AM
இறைவனின் இன்முகம்
Posted by
SALAI JAYARAMAN
at
1:53 AM
பூமித்தாய்
மானம் கெட்ட மடந்தை அவள்
பொறுமைக்குச் சொந்தக்காரி
வாழ்வளிக்க வந்த அவள்
வானம் பார்த்து நிற்கிறாள்
ஈனம் நிறை இன்னல்களால்
இயன்றவரை இடும்பளிக்கும்
இச்சகத்து மாந்தர் தம்மை
இரும்புக் கரம் கொண்டு
இதுவரைஇன்னல் இழைக்க நினைக்காதேன்
மானம் கெட்ட மடந்தை அவள்
மங்கை நல்லாள் பூமித்தாய்
Posted by
SALAI JAYARAMAN
at
12:14 AM
Saturday, January 19, 2008
மழை
தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கலாமோ
தாகமே இல்லையென தவறுதலாய் நினைத்துவிட்டாள்
தாகம் தீர்க்க வேண்டுமென்று தவமாய் தவித்திருந்தால்
தாவியே தான் வருவாள் தரணியெங்கும் பெய்வாள்
மோகமும் நீக்கிடுவாள் முகமும் சுழிக்கமாட்டாள்
தாகத்தோடு தேடுவோர்க்கு தமிழ்வழியே பொழிவாள்
தாகம் தீர்ந்த பேர்க்கு தவசியென்ற பெயரிடுவாள்
ஆனந்தவர்ஷிணி அமிர்தம் பொழியும் அம்மணி
அவள் கருணையென்னும் மழையால் காலமெல்லாம் காப்பாள்
Posted by
SALAI JAYARAMAN
at
9:36 AM
பரமபதம்
செய்ய பல செய்திகள் உண்டு
செம்மையாய் செய்யும் திறம் கொணடால்
செய்திகள் சேவையாகும்
சேவையின் பலன் சோகத்தை அசோகமாக்கும்
சோகநிலை மாற்றி யோக நிலை கூட்டும்
கூடும் குறிப்பறிய கொள்கை பல உண்டு
உண்டு கொழுக்கும் உணர்வை
உதைத்துத் தள்ளி தனிமையின்
தாக்கத்தை தவமாக்கி
சேவை செய்திடலாம் சேவடி பற்றி
பற்றியது யாவும் பழிக்கும் பற்றாம்
பற்றற்றான் பற்றினை
பற்றுவதுவே பரமபத சேவையாம்
Posted by
SALAI JAYARAMAN
at
5:02 AM
Wednesday, January 16, 2008
மெய்வழி
தொலைத்து விட்டோமென அழுதது மனது
அழுகையின் பயனாய் விரிந்தது உறவு
உறவின் உயர்வில் ஒளிர்ந்தது உள்ளம்
உள்ளத்து ஒளியில் கரைந்தது கள்ளம்
கரைந்தது காண களித்தது நெஞ்சம்
நெஞ்சம் நிறைவால் கனிந்தது காதல்
காதலின் நன்மை காலம் பேசும்
பேசும் பதம் பெற்றது மெய்யினால்
மெய்யென்றால் அது மேதையின் திருமேனி
மேதையின் மேன்மை அவதார மகிமை
குருவாய், உருவாய், குருஜியாய் மீண்டும்
அவத்தை தாங்கி ஆண்டவர்கள் அவதரித்தார்
மலைப்பின் மாண்பு மெய்யாய் வந்தது
வசை பாடும் வகை தவிர்த்து வசந்தத்தின்
வகையினை வார்த்தையில் வடித்தது
வல்வகை வள்ளலால் வந்தது இச் சிறப்பு
வாங்கிய வார்த்தைகொண்டு வளர்ந்தது ஒரு கல்
வாயத்தது பெறும்பேறு பெற்றது புது வடிவம்
பெற்ற பேறும் பெரும்பயனும் பேராமல் தங்கிட
இன்னும் பொருத்துக புதுமை புவியோருக்காய்
பொங்கல் நன்னாளில் புகலிடம் தேடி
வந்த உயிர் அனைத்திற்கும் வாரிவழங்கிய
போதனையால் பொங்கியது ஆசியும் அருளும்
அண்டிவந்தோருக்கு அனைத்தும் அருளிய
சிவமும் அதுவே சக்தியும் அதுவே
தொலைத்து விட்ட மெய்வழியை
தொடர்ந்து வந்து தொடரவைத்த
சத்தியமும் அதுவே சாயுச்யமும் அதுவே
Posted by
SALAI JAYARAMAN
at
10:09 PM
சூடு
சூடு
மண்ணைக் கல்லாக்கும்
கல்லைக் கரைய வைக்கும்.
ஆக்கும் அழிக்கும் சிவனின் சூடு
மனிதச் சூட்டின் வினை ஜனனம்.
ஜனனத்தின் தன்மை மயக்கம்
சூடு மறைந்த உடம்பு சுடுகாட்டுச் சொத்து
வினைக்கு வினையாய் விளைவது சூடு
காலத்தைக் கணித்ததும் சூடு
இருளைத் தகர்த்ததும் சூடு
சூட்டினால் பெற்ற சுகங்கள்
இருட்டினை நீக்கிய வரங்கள்
நல்ல மாட்டிற்கு ஒரு சூடு
மனிதனாகாவிட்டா மரணமெனும் சூடு
சட்டி சுட்டதும் கை விட்டதும்
காலமிட்ட சூது அநத்க் கயவனின் சூடு
காலனின் சூட்டை கவனப்பார் யாருமிலர்
காலனை வென்ற கணவனின் சூட்டினை
கருத்தாய்ப் பெற்றால் சூடும் சுகமே
குளிர்காய்வதும் சூட்டினிலே
பற்றியெறிவதும் சூட்டினிலே
பற்றியது எல்லாம் பாழே
சூடிட்டது சுயம்புவின் சூட்சுமம்
சுயம்புவின் சூடு ஞானத்தின் வீடு.
சூடில்லா உடம்பு சூன்யித்தில் துரும்பு
உள்ளத்தில் சூடு ஞானமாக்கும்
வார்த்தையில் சூடு உறவைக் கெடுக்கும்
உதட்டின் சூடு உயிரை இணைக்கும்.
இயக்கத்திற்கு மூலம் சூடு.
இயங்கானிலையிலும் சூடு.
இல்லாமை ஆக்குவது சூடு.
உயிரை உறவை உடம்மை தீய்ப்பது சூடு
ஆக்க வந்த சூடு அழித்தது அம்பலத்தே
சுத்தத்தின் ரூபம் சுகிர்தத்தின் சூடு
வெறுமையின் சூடு வெட்டவெளியாக்கும்
நன்மையான சூடு ஞானத்தின் திறவுகோல்
இதனமான சூடு இதயத்திற்குத் தேவைதான்.
பதமான சூட்டால் பரமபதம் கிட்டும்
அது வள்ளலில் வாய்மையால்
வாய்த்தோருக்கு வாய்க்கும்
வாயிலிட்ட சூட்டினால்
வார்த்தை விளக்கானது வார்த்தையெனும்
விளக்கால் வசமானது வீடு
சூடு நன்மையா தீமையா?!!!
Posted by
SALAI JAYARAMAN
at
9:16 PM
Sunday, January 13, 2008
குருகுல நாயகி கோதறுக்கும் வல்லி
ஜீவாவி உண்ணுதற்கே சீர்மலர் மணம் படைத்தான்
மணம் உள்ள ரோஜாவில் முள்ளையும் வைத்தான்
முள்ளில்லா ரோஜாவானால் மூவரும் முகர்வரே
முகர்தலில் முதன்மை கற்றாரைக் காமுறுவது
அவ காமம் தவிர்த்து சிவ காமம் ஆக்கினால்
காமமும் ரஞ்சிதமாம் அது மனதிடை ரஞ்சிதமாம்
ஊனொளி குறைத்து உள்ளொளி பெருக்க அது
ஏகாந்தவைப்பி்ன் இரு நிலை காட்டும்
இரு நிலை வாழ்ந்த இமயவன் கண் காதலாகிக்
கசிந்தால் காலமெலாம் வாழலாமே
கற்புநெறியும் இதுவாம் களவு நெறியும் இதுவாம்
தவத்திடை நெருங்க தனைத்தான் காதல் கொள்ளும்
அவத்திடை நெருங்க அவலத்தை அணைக்கும்
அன்னையாம் அருந்ததி அருகிருந்து அணைப்பாள்
அவள் செங்கமலக் கொங்கையால் தமிழ்ப்பால் கொடுப்பாள்
சாவாவரம் தருவாள் அவள் சகலத்தையும் அறிவாள்
அன்னையவள் அமுதமொழி அனைவருக்கும் ஆக
ரஞ்சிதமாம் மனோ ரஞ்சிதமாம் மாமாலம்
செய்திடுமாம் மக்கள் இதை அறிவரோ
மாதவங்கள் புரிந்தவர்க்கே தன்னில் பாதி தந்திடுவாள்
சங்கையவள் என்றும் பதினாறு வயது பத்தினி
பாத்திரமாய் ஆவோர்க்கு பதினாறும் தருவாள்
சாத்திரங்கள் வேண்டாமே சமயங்கள் வேண்டாமே
சாதகமாய் நின்றால் சகலமும் தருவாள்
அவள் அங்கயற்கண்ணி அமுத மொழி வல்லி
குருகுல நாயகி அவள் கோதறுந்த கொடையாள்
கொற்றவனும் நற்றவனும் கோமானும்
கொண்டவிடம் முடிவில் கொள்ளையிடமாமே
கோதறுந்த கொடையாள் கொடிபற்றி நின்றால்
கோடான கோடி வரம் நமக்குத் தருவாள்
குற்றமிலாப் பெருவாழ்வு குவலயத்தோர்க்கு
குறைவில்லா நிறைவாய் குணத்தோடு கொடுப்பாள்
Posted by
SALAI JAYARAMAN
at
6:49 AM


