Monday, February 25, 2008

தீ

வாழ்க்கையின் உயரிய தத்துவம் தீ.

தீக்கு இரையாகவிருக்கும் ஈரவிறகுதானே நாமெல்லோரும். இதுதானே சத்தியம். உயிரெனும் தீ உறங்கிவிட்டால், உற்றார் ஏது உறவேது. இரண்டறக் கலத்தல் தீயில்தானே. அறுதல் என்பதே இல்லையே.

அக்கினியின் கருணை பாவத்தின் சுவடைக் கூட இல்லாமையாக்கிவிடுமே. நாணுமே அக்கினி இந்த நயவஞ்சக மானுடத்தைக் கண்டு.

ஞானத்தின் திறவுகோல் தீ தானே.

அது இடும் நடனத்தை ரசிக்க நல்ல மனம் வேண்டும். தீயை நேசித்த போது, நிலையாமையின் நிதர்சனம் நிஜமாய்த் தெரியும்.

பெண்கள் பணி செய்து குடும்பத்தைக் காக்க தீயைச் சுமந்து பவனி வரும் காலமிது.

ஏனிந்த உழைப்பு, என்ன அடையப் போகிறோம். தீ உணர்த்தும் தீஸிஸ்.

உழைப்பின் உக்கிரம் அக்கினியின் சாயல்.

உழைக்க வேண்டிய கட்டாயத்தில் தாய்மை.

எங்கே போகிறோம் நாம்.

No comments: