Monday, February 4, 2008

நாரணன் நாமம்

நாவினால் சுடுவது
நாற்காரண ராஜ நிலை
நாதாங்கி நீக்கி
நடுநின்ற பொருளை
நாமம் விளித்து
நன்மாறம் கூற
திரண்டுவரும் நீதமது
தீங்கில்லா வெண்ணையாம்
நவநீதம் என்பதும்
நல்ல கதி என்பதும்
நாரணனின் நாமமே
வெண்தாளை வேக வைத்து
சுடாத தீயை
சுகமுடனே சுகித்திருக்க
சூட்சுமத்தின் சூத்திரத்தை
சூரியனுக்கு அர்ப்பணித்தால்
தீபார்த்த முத்தை
தீங்கிலாமல் காணலாமே

No comments: