Tuesday, February 5, 2008

விண்கலம்

விண்ணளாவிப் பறக்கலாம்
விண்கலங்கள் தேவையில்லை
தன்னில் ஒரு நிலவு
தனியாய் இருக்கிறது
வெளியில் பறக்க
வினைகளைச் சோ்க்கிறோம்
உள்ளுன் நிலவு
உவகையூட்டும் உணர்வு
அண்டம் என்பதும்
ஆகாசம் என்பதும்
அவனியில் அகத்துள்ளே
அமைதியாய்ப் பறப்பதற்கு
விண்கலங்கள் தேவையில்லை
வித்தகம் என்னும் விபரம் வேணும்
மனம் என்னும்
மாயக்குதிரை
மார்க்கத்தை மாயமாக்கும்
கவனக் குளிகையாம்
கார்மேகக் குதிரையில்
கருத்தாய் கலக்க
விண்கலத்துக்கு ஒப்ப
விரைவாய்ப் பயணிக்கலாமே

No comments: