Sunday, February 10, 2008

குரு வணக்கம்

குருவின் மகிமை
கூவி அழைப்போர்க்கு
குவியும் புண்ணியம்
குவலயத்தில் கோடி
எண்ணும் எழுத்தும்
அறிவித்த எம்பிரான்
ஏகமும் அவனே
ஆகமமும் அவனே
இல்லாமை அவனே
எல்லாமும் அவனே
அணுவும் அவனே
அண்ட பிண்டமும் அவனே
அருள்நிறை வாக்கினை
அவனிக்கு அளித்து
அருங்களைப்பாற்றிய
அண்ணலே சற்குருவே
நிந்தன் பொற்கழல் போற்றி

No comments: