தொலைத்து விட்டோமென அழுதது மனது
அழுகையின் பயனாய் விரிந்தது உறவு
உறவின் உயர்வில் ஒளிர்ந்தது உள்ளம்
உள்ளத்து ஒளியில் கரைந்தது கள்ளம்
கரைந்தது காண களித்தது நெஞ்சம்
நெஞ்சம் நிறைவால் கனிந்தது காதல்
காதலின் நன்மை காலம் பேசும்
பேசும் பதம் பெற்றது மெய்யினால்
மெய்யென்றால் அது மேதையின் திருமேனி
மேதையின் மேன்மை அவதார மகிமை
குருவாய், உருவாய், குருஜியாய் மீண்டும்
அவத்தை தாங்கி ஆண்டவர்கள் அவதரித்தார்
மலைப்பின் மாண்பு மெய்யாய் வந்தது
வசை பாடும் வகை தவிர்த்து வசந்தத்தின்
வகையினை வார்த்தையில் வடித்தது
வல்வகை வள்ளலால் வந்தது இச் சிறப்பு
வாங்கிய வார்த்தைகொண்டு வளர்ந்தது ஒரு கல்
வாயத்தது பெறும்பேறு பெற்றது புது வடிவம்
பெற்ற பேறும் பெரும்பயனும் பேராமல் தங்கிட
இன்னும் பொருத்துக புதுமை புவியோருக்காய்
பொங்கல் நன்னாளில் புகலிடம் தேடி
வந்த உயிர் அனைத்திற்கும் வாரிவழங்கிய
போதனையால் பொங்கியது ஆசியும் அருளும்
அண்டிவந்தோருக்கு அனைத்தும் அருளிய
சிவமும் அதுவே சக்தியும் அதுவே
தொலைத்து விட்ட மெய்வழியை
தொடர்ந்து வந்து தொடரவைத்த
சத்தியமும் அதுவே சாயுச்யமும் அதுவே
Wednesday, January 16, 2008
மெய்வழி
Posted by
SALAI JAYARAMAN
at
10:09 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment