செய்ய பல செய்திகள் உண்டு
செம்மையாய் செய்யும் திறம் கொணடால்
செய்திகள் சேவையாகும்
சேவையின் பலன் சோகத்தை அசோகமாக்கும்
சோகநிலை மாற்றி யோக நிலை கூட்டும்
கூடும் குறிப்பறிய கொள்கை பல உண்டு
உண்டு கொழுக்கும் உணர்வை
உதைத்துத் தள்ளி தனிமையின்
தாக்கத்தை தவமாக்கி
சேவை செய்திடலாம் சேவடி பற்றி
பற்றியது யாவும் பழிக்கும் பற்றாம்
பற்றற்றான் பற்றினை
பற்றுவதுவே பரமபத சேவையாம்
Saturday, January 19, 2008
பரமபதம்
Posted by
SALAI JAYARAMAN
at
5:02 AM
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
பரமபதம் அருமை ஐயா
பற்றிய பற்றுகள்
பற்றற விடவே
பற்றும் பற்றாம்
சற்குரு சரணம்
பற்றப் பற்றப்
பற்றும் மெய்க்கனல்
பற்றும் மெய்வழி
சற்குரு சரணம்
பரம பதத்தைச்
சிரமேற் பதித்து
நெஞ்சகம் திறந்த
சற்குரு சரணம்
அன்புடன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
நான் வழங்கும் மகாயோகம்
என் கவிதைகள்
Post a Comment