மாறாக ஓடும் மனதின் மயக்கம்
மானுடவ வாழ்வின் பயப் பரிணாமம்
மரண பயச் சவுக்குதான்
மாற்றுகின்ற மாமருந்து
பயம் என்பது வரமாகும்
பயத்துடன் பக்தி வேண்டும்
பயபக்திதான் பதியைக் காட்டும்
பயமில்லா வாழ்வு
மிருகத்தை ஒக்கும்
பயத்துடன் பொறுமை காத்தால்
பத்தியம் தேவைதானோ
பாசத்தால் விளையும் பயம்
பாதையைக் காட்டாது
பயத்தின் முடிவிடம்
பரமபத வீடு
Sunday, January 27, 2008
பயம்
Posted by
SALAI JAYARAMAN
at
5:54 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment