இல்லாத ஒன்றுதான் ஏழ்மையைக் காட்டும்
இருப்பவை யாவும் இறுமாப்பின் வெளிச்சம்
எல்லாம் இருந்தும் இல்லாததற்கு ஏங்கும்
இயல்பிலே ஏழையான எத்தனையோ போ்கள் உண்டு
உணவு இல்லையென்று அழுவாரும்
உணவு செரிக்கவில்லை என்று அழுவாரும்
உணவுக்காகவே உழைப்பாரும்
உணர்வில் ஏழைகளே
ஈதல் என்பதன் இலக்கணம் அறிந்தால்
இறைவனின் நிலையை அறியலாம்
ஏழையாக யாரையும் இறைவன் படைக்கவில்லை
அறிவின் நிலையறியா யாவரும்
எண்ணத்தில் ஏழைதானே
Saturday, January 26, 2008
ஏழை
Posted by
SALAI JAYARAMAN
at
8:54 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment