மறைபொருளாய் நின்ற
மாதவத்து மாதரசி
தன்மனமொப்ப நிற்பவர்க்கு
முழுயவனம் காட்டுவாள்
தாழ்மையோடு அவள் முகத்தைக்
காட்டுமாறு கேட்டுனின்றால்
அங்கத்தின் ஒரு பகுதி
அவர்தம் தரம் அறிந்து
அன்னையவள் தன்னழகை
அளவோடு வெளியிடுவாள்
ஒருவர்க்கு திருப்பாதமும்
உரத்து அழுவோர்க்கு
உதவிடும் திருக்கரமும்
முப்பாலாம் தமிழ்ப்பால் வேண்டி
தாகத்தோடு இருப்போர்க்கு
தன் அங்கம் முழுவதும்
அன்புடனே அன்னைஅவள்
அமுதசுரபியாய் அள்ளி வழங்குவாள்
Saturday, April 12, 2008
அன்னைத் தமிழ்
Posted by
SALAI JAYARAMAN
at
4:14 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment