முதலும் முடிவும்
மூலவனின் கையில்
முடிவைத் தேடி
முதலை இழந்தோம்
ஆக்கிய முதலை
ஆணவம் அழிக்க
மானம் இழந்தனிலை
மனிதப்பிறப்பினுக்கு
படிகள் கடந்து
பகலவன் முகத்தில்
பளிச்சென்று நின்றால்
இழந்த முதலும்
ஈடுகட்டி இல்லம் வரும்
மூலவனும்
முகம் பார்த்து
முக்தியெனும் முதலை
மும்முறை ஈவான்
கேடு கெட்ட
இப்பிறப்பின்
பாடுகள் பலவும்
பாவம் என்பது
பகல்போல் தெரியும்
கோடிகண்ட
கோமானின்
கோதறு அமுதத்தால்
முதலும் வட்டியும்
முழுதாய்ப் பெறலாம்
Tuesday, February 12, 2008
முதலும் முடிவும்
Posted by
SALAI JAYARAMAN
at
8:23 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment